கல்வி என்பது எமது வாழ்வில் முக்கியமான ஒன்று. எனவேதான் கல்வியினை கண்ணிற்கு உவமிக்கிறார் திருவள்ளுவர். தற்போதைய தொழிநுட்ப உலகில் தெரிவு (உhழiஉந) என்பது அத்தியாவசியமான ஒன்றாகக் காணப்படுகின்றது. தெரிவினைப் பொருத்தே எமது எதிர்காலமும் அமைகின்றது. நமது வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிடும் அளவிற்கு தெரிவு என்பது சக்தி வாய்ந்தது. நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை தெரிவு என்பது எமது வாழ்வில் ஓர் அங்கமாகி விட்டது. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன். பெற்றோர் தமது குழந்தைகளுக்கு சொத்துக்கள், வசதிகளை வழங்குவதை விட சிறந்த கல்வியினை வழங்க வேண்டும். கல்விச் செல்வம் மட்டுமே அழியாச் செல்வம் என்பது யாவரும் அறிந்த உண்மை. தற்கால மாணவர்கள் இணைய வசதியின் ஊடாக இலகுவாக தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிகின்றது. அவர்களின் சிந்திக்கும் திறன், பேச்சுத் திறன் என்பன தற்போது அதிகமாகவே காணப்படுகின்றது. எனவே, அவர்களின் வாழ்க்கை மற்றும் கல்வி தொடர்பான தெரிவுகளும் தவறான விதத்தில் அமையாத வகையில் தெரிவுகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் கல்வி பொது தராதர சாதாரண தரம் வரை கல்வி பயின்று உயர்தரம் செல்ல வேண்ட...
கருத்துகள்
கருத்துரையிடுக